Friday, 5 August 2011

”ஃபேஸ் புக்”


”ஆற்றுப்படுத்து”தலின் நவீனத்துவம் தான் ”ஃபேஸ்புக்”கோ? -இங்கே
புலவர்களே புரவலர்களாகவும்,
புரவலர்களே புலவர்களாகவும்…
கொடுத்த பொருளும், எடுத்த பொருளும்
பெருகிக்கொண்டே தான் இருக்கிறது.
அர்த்த கவளம் சிந்துகின்ற யானைகளும் உண்டு.
கருத்து அயிரையிடம் சிக்கிய பெருத்த திமிங்கலங்களும் உண்டு.
புதுப்புனலில் புரண்டு வரும் புயகம் போல,
பொய் புகற்கும் புஞ்சலிகளும், அவர்ப் புதல்வர்களும் கொஞ்சம் உண்டு.
சிலேடைகளும் உண்டு, கொஞ்சம் சேட்டைகளும் உண்டு.
முகநக நட்பது குறைவு, அகநக நட்பே அதிகம்.

அட…!
எங்க காலத்திலேயும் – ஒரு
சங்க காலம்!

No comments:

Post a Comment